கிருஷ்ண சாதகர்
- ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவரது பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் கீழ் பக்தி-யோகத்தை படிப்படியாகக் கற்று, பயிற்சி செய்வதன் மூலம், பக்தி மிகுந்த வாழ்க்கை முறையை வழிநடத்த அர்ப்பணிப்புடன் இருத்தல்.
- ஸ்ரீல பிரபுபாதருடைய புத்தகங்களை படித்தல், வாராந்திர நிகழ்ச்சியில் முடிந்தவரை அடிக்கடி கலந்து கொள்ளுதல் (வாராந்திர பகவத்கீதை வகுப்பிலாவது தவறாது கலந்து கொள்ளுதல்).
- பகவான் கிருஷ்ணரை இயன்றவரை இல்லத்தில் வழிபடுதல், பூஜை அறையை நிர்மாணித்தல், ஆரத்தி மற்றும் பகவானுக்கு நிவேதனம் செய்தல், புனிதமான துளசி தேவியை வழிபடுதல், மேலும் அனுதினமும் அதிகாலையில் எழுந்து அடிப்படை சாதனையை செய்தல்.
- அனு தினமும் எட்டு முதல் பதினாறு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.
- மாமிசம் உண்பது (மீன் மற்றும் முட்டை உட்பட), போதை (மதுபானங்கள் & புகைப்பிடித்தல்), சூதாட்டம் மற்றும் தகாத உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்த்து தூய்மையான, புனிதமான வாழ்க்கை வாழ்வது.
- வைணவ நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஏகாதசி மற்றும் வைணவ பண்டிகை தினங்களில் விரதம் அனுஷ்டித்தல்.